Latest topics
» ''ஷகிலா படங்கள் வராதது வருத்தமா இருக்கு!''by Admin Mon Oct 14, 2013 6:58 am
» சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?
by Admin Mon Oct 14, 2013 6:56 am
» மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்!
by Admin Mon Oct 14, 2013 6:55 am
» Next “ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை!”
by Admin Mon Oct 14, 2013 6:53 am
» எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» Download Tamil Mp3 Songs: Arambam (2013)
by Admin Tue Sep 24, 2013 3:56 pm
» Soundharya sings Chinna Thai Aval
by Admin Mon Sep 23, 2013 1:21 pm
» Naiyaandi Official Teaser - Dhanus
by Admin Mon Sep 23, 2013 1:20 pm
காமெடி புயலும் இல்லை; சூறாவளியும் இல்லை பில்டப் கொடுத்து ஊருக்கு அனுப்பிடாதீங்க - சிவ கார்த்திகேயன்!!
Page 1 of 1
காமெடி புயலும் இல்லை; சூறாவளியும் இல்லை பில்டப் கொடுத்து ஊருக்கு அனுப்பிடாதீங்க - சிவ கார்த்திகேயன்!!
[You must be registered and logged in to see this image.]
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிக குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சி கண்டு இருப்பவரும் இவர் தான். கடைசியாக இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற மூன்று படங்கள் வசூல் ரீதியாக ஹிட்டாகியுள்ளது. இதனால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது ஹன்சிகாவுடன் மான்கராத்தே படத்தில் நடித்து வரும் சிவா அளித்த சிறப்பு பேட்டி...
* இப்படி ஒரு, தொடர் வெற்றியை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்களே?
உண்மை தான். இத்தனைக்கும் காரணம் மக்கள் தான். அவங்களுக்கு தான் பெரிய நன்றி சொல்லணும். இன்னும் கடுமையா உழைக்கணும் என்ற பொறுப்பு இப்ப கூடுதலா வந்திருக்கு.
* ஒரே மாதிரி நடிச்சா, அலுப்பு தட்டிடுமே?
ஒவ்வொரு படமும், என் முந்தைய படத்தை விட கொஞ்சம் வேறுபட்டு இருக்க ஆசைப்படுவேன். ஒரே மாதிரி படத்தை பார்க்க போர் அடிக்கும். எனக்கு, பறந்து பறந்து போடும் சண்டை காட்சி வேணாம். சரியான வகையில் அடுத்தடுத்த படங்களில் அது அமையும்ன்னு நம்புறேன். இனிமேல் நடிக்கும் படங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
* உங்களுக்கு சரியான போட்டி யார்?
போட்டிங்கறது எல்லாம் சும்மா.கதை, கேரக்டருக்கு யார் தேவைப்படுறாங்களோ அவங்களுக்கு வாய்ப்பு இருக்கும். எனக்கு போட்டினா, நான் தான். அடுத்து என்ன செய்யலாம் அடுத்ததா என்ன புதுசா சொல்லலாம் என்ற எண்ணம் தான் மனசில நிக்குது.
* சம்பளம் எக்குதப்பா எகிறிடுச்சி, நீங்களே அதிகமாக ஏத்திட்டதா சொல்றாங்களே?
இன்னுமா இதை இந்த ஊர் நம்புது? நல்ல சம்பளம் தயாரிப்பாளர் கொடுக்கிறாங்க. இதுக்கு மேலேயும் நான் ஏன் கேக்கப்போறேன். அவங்க முடிவு செய்து தர்றத நான் வாங்கிக்கிறேன்.
* நீங்க ஹன்சிகாவுக்கு ஜோடியா நடிக்கிறது பத்தி, கோடம்பாக்கத்தில் பல பேர்க்கு பகீர்ன்னு இருக்கு தெரியுமா?
என்கிட்டயே நிறைய பேர் கேட்டுட்டாங்களே, பாவம் அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. ஏழெட்டு நாள் தான் 2 பேரும் சேர்ந்து நடித்திருக்கோம். ஏதோ பேசி, சிரிச்சு நடிச்சிட்டுருக்கேன். அந்த பொண்ணும் அப்பப்ப என்னன்னு புரியாம சிரிக்கும்.
* காமெடிப்புயல், இளம் சூறாவளி அப்படி இப்படின்னு பட்டம் எல்லாம் கொடுத்து இருப்பாங்களே?
அய்யோ இப்போ தான், நான் கோடம்பாக்கத்துக்குள்ளே காலடி வச்சிருக்கேன். அதுக்குள்ள என்னை திருப்பி அனுப்பிடாதீங்க. ஏதோ என் பிழைப்பு போயிட்டுருக்கு. பட்டம் அது இதுன்னு கொடுத்து, என்னை காலி பண்ணிடாதீங்க. அந்த ஆசை எல்லாம் நமக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிக குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சி கண்டு இருப்பவரும் இவர் தான். கடைசியாக இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற மூன்று படங்கள் வசூல் ரீதியாக ஹிட்டாகியுள்ளது. இதனால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது ஹன்சிகாவுடன் மான்கராத்தே படத்தில் நடித்து வரும் சிவா அளித்த சிறப்பு பேட்டி...
* இப்படி ஒரு, தொடர் வெற்றியை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்களே?
உண்மை தான். இத்தனைக்கும் காரணம் மக்கள் தான். அவங்களுக்கு தான் பெரிய நன்றி சொல்லணும். இன்னும் கடுமையா உழைக்கணும் என்ற பொறுப்பு இப்ப கூடுதலா வந்திருக்கு.
* ஒரே மாதிரி நடிச்சா, அலுப்பு தட்டிடுமே?
ஒவ்வொரு படமும், என் முந்தைய படத்தை விட கொஞ்சம் வேறுபட்டு இருக்க ஆசைப்படுவேன். ஒரே மாதிரி படத்தை பார்க்க போர் அடிக்கும். எனக்கு, பறந்து பறந்து போடும் சண்டை காட்சி வேணாம். சரியான வகையில் அடுத்தடுத்த படங்களில் அது அமையும்ன்னு நம்புறேன். இனிமேல் நடிக்கும் படங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
* உங்களுக்கு சரியான போட்டி யார்?
போட்டிங்கறது எல்லாம் சும்மா.கதை, கேரக்டருக்கு யார் தேவைப்படுறாங்களோ அவங்களுக்கு வாய்ப்பு இருக்கும். எனக்கு போட்டினா, நான் தான். அடுத்து என்ன செய்யலாம் அடுத்ததா என்ன புதுசா சொல்லலாம் என்ற எண்ணம் தான் மனசில நிக்குது.
* சம்பளம் எக்குதப்பா எகிறிடுச்சி, நீங்களே அதிகமாக ஏத்திட்டதா சொல்றாங்களே?
இன்னுமா இதை இந்த ஊர் நம்புது? நல்ல சம்பளம் தயாரிப்பாளர் கொடுக்கிறாங்க. இதுக்கு மேலேயும் நான் ஏன் கேக்கப்போறேன். அவங்க முடிவு செய்து தர்றத நான் வாங்கிக்கிறேன்.
* நீங்க ஹன்சிகாவுக்கு ஜோடியா நடிக்கிறது பத்தி, கோடம்பாக்கத்தில் பல பேர்க்கு பகீர்ன்னு இருக்கு தெரியுமா?
என்கிட்டயே நிறைய பேர் கேட்டுட்டாங்களே, பாவம் அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. ஏழெட்டு நாள் தான் 2 பேரும் சேர்ந்து நடித்திருக்கோம். ஏதோ பேசி, சிரிச்சு நடிச்சிட்டுருக்கேன். அந்த பொண்ணும் அப்பப்ப என்னன்னு புரியாம சிரிக்கும்.
* காமெடிப்புயல், இளம் சூறாவளி அப்படி இப்படின்னு பட்டம் எல்லாம் கொடுத்து இருப்பாங்களே?
அய்யோ இப்போ தான், நான் கோடம்பாக்கத்துக்குள்ளே காலடி வச்சிருக்கேன். அதுக்குள்ள என்னை திருப்பி அனுப்பிடாதீங்க. ஏதோ என் பிழைப்பு போயிட்டுருக்கு. பட்டம் அது இதுன்னு கொடுத்து, என்னை காலி பண்ணிடாதீங்க. அந்த ஆசை எல்லாம் நமக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|